செயல்நிலை ஆய்வு – கல்விமாணி கற்கைநெறி (Research for B.ed & M.ed)

இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

1.0 அறிமுகம்

ஒவ்வொரு சமூகத்திலும் முன்னேற்றம் அடைய கல்விதான் முக்கியம். கல்வி இல்லாத சமூகம் முன்னேற முடியாது. கல்வி என்பது ஒவ்வொரு நாட்டிலும் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. கல்வி துறையில் இலங்கையானது முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அந்த வகையில் 92.60% எழுத்தறிவு மட்டத்துடன் (இலங்கை மத்திய வங்கி 2019) உலகிலேயே அதிகளவு கல்வியறிவு பெற்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை நாடு திகழ்கின்றது. கல்வி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் தான் நம் நாட்டை இவ்வளவு உயரத்திற்கு கொண்டுவர முடிந்துள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக தேசத்தின் இன்றைய நிலையில் நமது சமூகமும் நமது பெற்றோர்களும் மாணவர்களின் கல்வி முடிவுகளை மட்டுமே விரும்புகின்றனர். அதற்காக மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது, என்று எமது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை முன்பள்ளி வயதிலேயே தனியார் ஆசிரியர்களிடம் அனுப்பி அல்லது அவர்களை வீடுகளுக்கு வரவழைத்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைவதற்கும், சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகளை பெறுவதற்கும்இ வேண்டிய ஏற்பாடுகளே செய்து வருகின்றனர்.

அத்தகைய போட்டி வேகத்தை துரத்தி 9A சித்திகளை பெறும் பிள்ளை அறிவு, திறன் மற்றும் மனப்பான்மை கொண்ட முழுமையான பிள்ளையா? என்பதே பொதுவான கேள்வி. இந்தப் போட்டி கற்றல் முறையில் கல்வி துறையில் பல்வேறு கொள்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் பரீட்சை பெறுபேறுகளை மாத்திரம் கவனத்தில் கொண்டு செயல்படும் மாணவர் சமூகம் விளையாட்டு மற்றும் உடற் கல்வி செயற்பாடுகளில் அதிக ஈடுபாட்டை காட்டுவதில்லை.

விளையாட்டின் கடந்த கால வரலாற்றை கருத்தில் கொள்ளும்போது மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை முடித்துவிட்டு ஓய்வெடுவதற்கான வழிமுறையாக பல்வேறு ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். விளையாட்டை சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவே கருதினார். விளையாட்டின் ஈடுபாடு காரணமாக அன்றைய மக்கள் நீண்ட காலம் வாழ்ந்தனர். நல்ல ஆரோக்கியத்துடன் உடல் மற்றும் சமநிலை ஆளுமையுடன் வாழ்ந்தனர். அந்த நல்ல ஆரோக்கியம் கடந்த காலத்திற்கு இன்றியமையாதது போலவே நிகழ்காலத்திற்கு அவசியம். எனவே நமது மாணவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், ஆக்கபூர்வமாகவும் சீரான ஆளுமை கொண்ட குடிமக்களாக மாற்றுவதற்கு நமது நாட்டின் கல்வியியலாளர்கள் உறுதி கொண்டுள்ளனர்.

விளையாட்டில் ஈடுபடுவதன் ஊடாக சகிப்புத்தன்மை, ஒற்றுமை, குழு செயற்பாடு தலைமைத்துவம், கீழ்படிதல், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு ஆகிய பண்புகள் மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும். இருப்பினும் பாடசாலைகளில் கால அட்டவணையில் விளையாட்டு செயல்பாடுகளுக்கு இரண்டு பாட வேலைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இரண்டு பாட வேலைகளும் 9A சித்தி தொடர்பான எண்ணக்கரு காரணமாக மாணவர்கள் விளையாட்டு மைதானத்திற்கு செல்லாமல் வகுப்பறையில் படிக்க ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இதனால் மாணவர்கள் இன்று மாலை நேரங்களில் விளையாடுவதும் பயிற்சி செய்வதும் குறைவாகவே உள்ளது. பிள்ளைகள் மிகவும் சோர்வாக இருப்பதை ஆசிரியர்கள் எதிர்க்கவில்லை. இதற்கு காரணம் தற்போதுள்ள கல்வி முறைப்படி மாணவர்களின் பெறுபேறுகளைக் கொண்டு தான் ஆசிரியர்களின் திறன் அளவிடப்படுகின்றது. மேலும் மாணவர்களின் பெறுபேறுகள் குறைவாக இருந்தால் ஆசிரியர்களும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் 9A சித்திகளை பெறுவதற்கு மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டிய நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் நாம் விரும்பிய அளவில் சாதனை படைக்க வேண்டுமானால் மாணவரின் உடல் மற்றும் உள ஆரோக்கியம் இன்றியமையாதது. இதற்கு விளையாட்டு அவசியம் என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கைகளுக்கும் வெளியிட்ட வண்ணம் உள்ளது. நல்ல உடல் மற்றும் மனப்பாங்குகளைக் கொண்ட ஆரோக்கியமான மற்றும் ஆக்கபூர்வமான குடிமகனை நம் நாட்டிற்கு வழங்குவுதற்கு தேவையான செயற்பாடுகள் பாடசாலை கல்வி முறையில் உள்ளடக்;கி காணப்படுகின்றது. இந்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் விளையாட்டிற்கு தனி இடம் உண்டு.

இதன்படி ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி; வழங்கப்படுவது போன்று ஒவ்வொரு மாணவருக்கும் விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆனால் அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் மேலே குறிப்பிட்டது போல பிள்ளைகள் விளையாட்டின் பக்கம் திரும்பவில்லை.

இதற்கு காரணம் பிள்ளைகளின் கல்விக்கு விளையாட்டு தடையாக இருப்பதாக பெற்றோர்கள் உணர்கின்றார்களா? அல்லது விளையாட்டில் ஈடுபடும் மமாணவரின் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்துள்ளதா? அல்லது விளையாட்டில் ஈடுபடாத பிள்ளைகளின் கல்வித்ததரம் உயர்ந்துள்ளதா? என்பதே எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள். அத்துடன் மாணவர்களின் ஈடுபாடு, ஆசிரியர்களின் பற்றாக்குறை, உரிய பாடத்திற்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இன்மை, வளப்பற்றாக்குறை, நேர வளம் இன்மை என்பன பிரச்சினைகளுக்கு தாக்கம் செலுத்தும் காரணிகளாக உள்ளன.

1.2. ஆய்வுப்பின்னணி

மாணவர்களின் உடல், உள, ஆளுமை விருத்தியில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. பெரும்பாலான மாணவர்கள் கல்வியில் மட்டுமே சாதனை படைக்க விரும்புகின்றனர். விளையாட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. பாடசாலையில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதை ஆசிரியர்களும் ஊக்குவிப்பதில்லை. மேலும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் நன் நடத்தையுடன் இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் திறனும் உள்ளது. இதனால் கல்வியிலும் சிறந்தவர்களாக விளையாட்டு வீரர்களும் உள்ளனர்.

எனவே கல்விக்கும் விளையாட்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அந்த வகையில் ஒரு மனிதனை சிறந்த முறையில் சிந்திக்க தூண்டுவதில் விளையாட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. இதய நோய்களை தவிர்ப்பதற்கும், மன அழுத்தம் இன்றி வாழ்வதற்கும் விளையாடடு மற்றும் உடற்பயிற்சி முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும் சிந்தனை விருத்தி ஏற்படல், மகிழ்ச்சியான சிந்தனை, உடல் திறன்களை வலுப்பெறல், ஒத்துழைப்பு தன்மை, வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் போன்ற பல்வேறு விடயங்களை வளர்த்த்துக் கொள்வதில் விளையாட்டானது முக்கியதொன்றாக அமைந்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் விளையாட்டானது கணினி தொலைபேசி போன்ற சாதனங்களுடனே காணப்படுகின்றது. இவ்வாறான விளையாட்டானது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக அமைகின்றது. மேலும் இதன் ஊடாக கல்வி கற்பதில் கவனச்சிதறல்கள் மற்றும் கண் பார்வை இழப்பு போன்ற உடலியல் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. உடல் வலுப்பெறும் விளையாட்டுக்களே எமது உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றன. இந்த வகையில் வலப்பனை வலயத்தில் உள்ள இடைநிலை பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டு செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்

1.3 ஆய்வுக்கான நியாயப்படுத்தல்

  1. இன்று நடைமுறையிலுள்ள பாடசாலை கலைத்திட்டத்தின் நோக்கம் பாடக் குறிக்கோள்களை அடைந்து அதனூடாக அடிப்படை தேர்ச்சிகளை விருத்தி செய்து தேசிய பொது இலக்குகளை அடைவதாகும். அத்துடன் சமநிலை ஆளுமையுள்ள பிரசையை உருவாக்குவதையும் முதன்மையான நோக்கமாகவும் கொண்டுள்ளது. பாடசாலைக் கல்வி முறையில் பிரதான பங்குதாரர்களாக தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள், மாகாண கல்வி திணைக்கள அலுவலகர்கள், வலயக்கல்வி காரியாலய அதிகாரிகள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு மாணவர்கள் உடற்பயிற்சிகளிலும் விளையாட்டுகளிலும் அரிதாகவே ஈடுபடுவதற்கான காரணங்கள் எவை என கண்டறிதல் அவசியமானதாகும். இதன் மூலம் மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாடுளை அதிகரிக்கக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வாய்ப்பாக அமையும்.
  2. குறித்த பிரச்சினை பற்றி ஏற்கனவே குறைவாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இலங்கையின் முன்னோடி ஆய்வாளர்களின் கருத்துக்களுக்கு இணங்கவும் இலக்கிய மீளாய்வுக்கு இணங்கவும் இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளை செல்வாக்கு காரணிகளை கண்டறிதல் தொடர்பாக மிகவும் குறைவான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. எனவே குறித்த இவ்வாய்வானது இத்துறையில் ஆய்வுக்கு பங்களிப்பு செய்யும் முகமாகவும் மேற்கொள்ளப்படுவது முக்கியமானதாகும்.
  3. கல்விசார் கருத்துக்களை எண்ணக்கருக்களையும் விளங்கிக் கொள்வதற்கு

    கல்வி உலகில் நடைமுறையில் உள்ள இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் தொடர்பான கருத்துக்களையும் எண்ணக்கருக்களையும் விளங்கிக் கொள்வததற்கு உறுதுணையாக அமையும்.
  4. கல்வி முறைமைகளின் குறிப்பாக விடயங்கள் சிறப்பாக ஆற்றப்படாமைக்கான காரணங்களை விளக்குவதற்கு

    மாணவர்கள் தமது உடல் ஆளுமை விருத்திகளுக்கு வேண்டிய உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளிலும் அரிதாகவே ஈடுபடுகின்;றனர். எனவே மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை கண்டறிந்து தீர்க்கவும், தீர்வுகளை முன் வைப்பதற்கும்ளு மேற்படி ஆய்வு துணை செய்யும்.

1.4. ஆய்வு பிரச்சினை

பிரச்சினையும் அதன் கல்விசார் அடிப்படையும் வகுப்பறை கல்விக்கு மேலதிகமாக, கல்வி அமைச்சு மாணவர்கள் விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான சுற்றறிக்கைகளை வெளியிடுகிறது. கல்வி அமைச்சினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் இறுதி இலக்கு எதிர்பார்த்த நோக்கத்தை அடைவதாகவே இருந்தது. அதன்படி கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுகையில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு விளையாட்டிலாவது ஈடுபட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அது கல்வியின் நோக்கத்தை அடைக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்வி இலக்கை அடைவதில் விளையாட்டு எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதே ஆய்வாகும.; அதாவது மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை கண்டறிதல் இங்கு அவசியமாகிறது.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள இலங்கையின் தேசிய பொதுக்கல்வி கொள்கைக்கான முன்மொழிவுகளில் இலங்கையின் கலைத்திட்ட விருத்தி பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து உள்ளது. கல்வி பற்றிய சிறப்புக்குழு அறிக்கையும் (1943) அதி பொருத்தமான காலத்திட்ட சீரமைப்புகளை முன்மொழிந்துள்ளது. அவற்றில் மாணவர்கள் தமது உடல் ஆளுமை விருத்திகளுக்கு வேண்டிய உடற்பயிற்சிகளிலும், விளையாட்டுகளிலும் அரிதாகவே ஈடுபடுகின்றனர். (தேசிய கல்வி ஆணைக்குழு 2016) என்ற பிரச்சினையையும் பிரதானமாகவே முன்மொழிந்துள்ளது.

எனவே பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகள் மிகக் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. Jeffrey Steven White (2021) வெளியிட்ட The Effects of Sports Participation on Academic Achievement  for Seventh Graders in Urban Pennsylvania. தனது ஆய்வு அறிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுக்களின் எண்ணிக்கை அவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்கின்றது, என்ற இடைவெளியை ஆய்வின் இடைவெளியாகக் கொண்டு அதனை ஆய்வு பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி இவ்ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

1.5 ஆய்வின் பிரதான நோக்கம்

இடைநிலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் கொண்டுள்ள செல்வாக்கினை கண்டறிதல் இவ் ஆய்வின் பிரதான நோக்கமாகும்.

1.6 ஆய்வின் சிறப்புக் குறிக்கோள்/ கருதுகோள்

  1. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளின் தற்போதைய நிலையை ஆராய்தல்.
  2. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் ஆசிரியர்களின் பங்களிப்பை தேடியறிதல்.
  3. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் பெற்றோரின் எதிர்ப்பார்ப்பை கண்டறிதல்.
  4. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி, உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் விதந்துரைப்புகளையும் முன்வைத்தல்.

கருதுகோள்கள்

H1- உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடாதவர்களின் திறன்கள் ஒரே மாதிரியாகவே காணப்படும்.

HO- உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடாதவர்களின் திறன்கள் ஒரே மாதிரியாக காணப்படாது.

ஆய்வு விளக்கம்

  1. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் தற்போது எவ்வாறு உள்ளது?
  2. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வாறு காணப்படுகிறது?
  3. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் பெற்றோரின் எதிர்பார்ப்பு எவ்வாறு காணப்படுகிறது?
  4. இடைநிலை மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் கற்றலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது?

1.7 ஆய்வின் முக்கியத்துவம்

விளையாட்டானது ஒருவரை ஆக்கபூர்வமாக சிந்திக்க வைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக காணப்படுகின்றது. அதே போன்று ஒரு குழந்தையினுடைய வளர்ச்சியில் விளையாட்டினுடைய பங்கானது பாரிய செல்வாக்கு செலுத்துவதாக காணப்பபடுகின்றது. விளையாட்டானது வெற்றி மற்றும் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையை ஏற்படுத்த துணைப்புரிவதோடு வாழ்வில் விளையாட்டின்றி மனிதன் இல்லை என்று கூறுமளவிற்கு விளையாட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. விளையாட்டின் மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய வாய்ப்பும் கிடைக்கிறது.

மேலும் தலைமைத்துவ பண்பும் வளர்க்கப்படுகிறது. இன்று விளையாட்டுக்கள் என்பது நவீன தொழிநுட்ப சாதனங்களான தொலைபேசி, கணிணி என்பவற்றுடனே காணப்படுகின்றது. அதாவது ஓரிடத்தில் இருந்து கொண்டே விளையாடும் முறையினை காணக்கூடியதாக உள்ளது. பாடசாலைகளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்குமுறையில் அமுல்படுத்தும் போது மாணவர்கள் சிறந்த முறையில் ஒழுக்கமுள்ளவர்களாகவும், குழு மனப்பான்மையுடனும் தலைமைத்துவத்தை ஏற்பவர்களாகவும் செயற்படுவார்கள். எனவே பாடசாலையானது கல்விக்கும், விளையாட்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாடசாலைகளில் இவ்விளையாட்டு செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை ஆராய்வதன் ஊடாக இவ்வாய்வு முக்கியத்துவம் பெறுகின்றது.

1.8 சார்பிலக்கியம் / இலக்கிய மீளாய்வு

அட்டவணை: 01 சார்பிலக்கிய அட்டவணை

இலஎழுத்தாளரும் ஆண்டும்ஆய்வு நோக்கம் ஆய்வு முடிவுகள்எதிர்கால ஆய்வுக்கான விதந்துரைகுறித்த ஆய்வுடன் தொடர்புபடும் விதம்
1Carlos.M. Cotto Jr (2016)
 
கல்வி வெற்றியில் விளையாட்டில் பங்கேற்பின் விளைவுகளை கண்டறிதல்.மாணவர்களின் சவால்களை எடுத்துரைத்து கல்வி அடைவு இடைவெளிகளை நிவர்த்தி செய்ய இளம் நகர்புற ஆண்களின் உதவியைப் பெற்றுக்கொள்ளல்.விளையாட்டு வீரர்களை நேர்காணல் செய்தல். கல்வி வெற்றியில் பள்ளி மற்றும் சமூகம் பற்றிய ஆராய்ச்சிகளை கிராம நகர் புறங்களில் நடத்தி ஒப்பிடல்கல்வி நடவடிக்கையில் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை ஆய்வாளரின் பிரதேசத்தில் ஆராய்தல்.
2Chad.D.Meyerhoefer
(2016)
பாடசாலை மாணவர்களின் கல்வி பள்ளி விளையாட்டில் பங்கேற்பதன் விளைவினைப் பற்றி ஆராய்தல்.மாணவர்களின் உடல் உயரத்துடன் தொடர்பான பிரச்சினைகளை புறக்கணித்தல்.பாடசாலை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்கும் அணுகலை விரிவுப்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.பள்ளிச்சூழலில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதை ஊக்குவித்து கல்வி அடைவு மட்டத்தை மேம்படுத்தல்.
3Jeffrey Steven White (2021)பென்சில்வேனியாவில் ஏழாம் வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவில் விளையாட்டில் பங்கேற்பின் விளைவுகளை கண்டறிதல்.கற்றல் அடைவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.ஒரு விளையாட்டில் பங்கேற்கும் நேரம் அல்லது மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுக்களின் எண்ணிக்கை ஒரு மாணவனின் கல்வி அடைவை பாதிக்கலாம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.ஆய்வாளரின் பிரதேசத்தில் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் கல்வி அடைவு எவ்வாறு செல்வாக்கு செலுத்தும் என ஆராய்தல்
4Joswa Pillonid
Ma. De (2020)
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அல்லாதவர்களின் கல்வி செயல் திறனை கண்டறிதல்     விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களும் விளையாட்டில் ஈடுபடாத மாணவர்களும் ஒரே கல்வி தகைமைகளை கொண்டுள்ளனர்.ஓரு பாடத்தில் மட்டும் கவனஞ்செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே மற்ற பாடங்களில்; கவனஞ்செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.ஓரு பாடத்தில் மட்டும் தொடர்பு படுத்தாமல் முழு அடைவ மட்டத்திலும் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் செல்வாக்கு செலுத்தும் விதத்தை ஆராய்தல்
5Pamudini, K. and Manel, D.P.K (2021)கண்டி மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நோக்கத்தை விளையாட்டு எவ்வாறு பாதிக்கிறது என்பதை அடையாளம் காணுதல்.விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் தங்களது கல்வியுடன் திருப்தி அடைந்துள்ளனர்.எதிர்காலத்தில் பாடசாலைகள் விளையாடுவதற்குரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.தரம் பதினொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் எவ்வாறு கல்வி அடைவில் தாக்கம் செலுத்துகின்றது என ஆய்வு செய்தல்.
இலக்கிய மீளாய்வு / சார்பிலக்கிய அட்டவணை

1.8.2 எண்ணக்கரு வரைபடம்

கல்வி அடைவுகளில் விளையாட்டின் நேர்மறையான விளைவுகள் விளையாட்டு மற்றும் கல்வி நோக்கங்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பெரும்பான்மையானவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதற்கும் மாணவர்களின் பெறுபேறுக்குமிடையில் நேர்மறையான தொடர்பை ஆதரிக்கின்றனர். சில ஆய்வாளர்கள் விளையாட்டில் பங்கேற்பது கற்றல் செயற்திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. Gorton (2016), Grimit, (2014). White (2005) ஆகியோர் விளையாட்டு மற்றும் கற்றல் பெறுபேறுகளுக்கிடையில் ஒரு நேர்மறையான தொடர்பு இருப்பதாக கூறினர். இங்கு பல ஆய்வாளர்கள் மாணவர்களின் பெறுபேறுளின் மீது கவனஞ் செலுத்தி தொடர்பினை ஆராய்கின்றனர்.

மேலும் விளையாட்டு மற்றும் கற்றல் அடைவுகளுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தை கண்டறிய விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களின் அடைவு, விளையாட்டில் ஈடுபடாத மாணவர்களின் அடைவு ஆகியவற்றை ஸ்டெகலின் (2012) என்ற ஆய்வாளர் ஒப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் உள்ள உயர்நிலை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்துப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த முடிவினை எடுத்துள்ளார்.

விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் மற்ற மாணவர்களை விட சிறந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொறுப்புணர்ச்சி அம்சத்தில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காத மாணவர்களை விட விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் நிலை சிறப்பாக உள்ளதாக அறியப்பட்டது. (Ocal, 2006). விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பது தலைமைத்துவப்பண்பு, ஒழுக்கம், பொறுப்பு என்பவற்றை வளர்க்க உதவுகிறது.

(கேபட்டே 2016). தடகள போட்டியில் ஈடுபடும் மாணவர்கள் அனைவருக்கும் சமூக தொடர்பு அதிகரித்திருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்ட உண்மை. (சென் மற்றும் பலர் 2010). எனவே மற்ற மாணவர்களை விட விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களிடம் பெறுபேற்று மட்டம் அதிகரித்து இருப்பதுடன் மனப்பான்மையும் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகிறது.

1.9 ஆய்வு முறையியல்

1.9.1 அறிமுகம்

ஆய்வு என்பது பொதுவான பிரச்சினையொன்றை ஆராய்ந்து அதற்கான தீர்வு அல்லது முடிவினை துணிவதாகும். ஆய்வு ஒன்றினை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போது அந்த ஆய்வில் உள்ள உண்மைத்தன்மை வெளிகொண்டு வரப்படுகின்றது. (சபா ஜெயராசா .2000) ஒரு ஆய்வு வெற்றிபெற வேண்டுமாயின், அதை நன்கு திட்டமிட்டுச் செயற்படுத்துவது மிகவும் அவசியமாகும். இந்த ஆய்வானது தரம் பதினொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள், அவர்களின் அடைவு மட்டத்தில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதையே ஆராய்கிறது.
இதில் மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளின்; ஈடுபாடு, ஆசிரியர்களின் பங்களிப்பு, பெற்றோர்களின் எதிர்பார்ப்பு என்பன எவ்வாறு மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை ஆராய்வதே நோக்கமாக கொண்டுள்ளது. இதற்கான மாதிரி தொழிநுட்பம், தரவு சேகரிப்பு முறைமை, நம்பகத்தன்மை, சோதனை புள்ளி விபரவியல் ஆய்வு, தரவு பகுப்பாய்வு முறைகள் என்பன இப்பகுதி உள்ளடக்கியுள்ளது.

1.9.2 ஆய்வின் தத்துவார்த்த அடிப்படை

இந்த ஆய்வு இடைநிலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் கொண்டுள்ள செல்வாக்கு தொடர்பாக ஏற்கனவே காணப்படுகின்ற இலக்கியங்களை மதிப்பாய்வு செய்கின்றது. மற்றும் எண்;ணக்கரு கட்டமைப்பிற்குள் மேலதிக ஆய்விற்கு வழிகாட்டும் கோட்பாடுகள் மற்றும் புதிய மாதிரிகளை முன்மொழிகிறது.

1.9.3 ஆய்வு அணுகுமுறை

இந்த ஆய்வு சமூகவியல் ஆய்வு என்பதால் வினாக்கொத்து, பேட்டிகாணல், கலந்துரையாடல் போன்றவற்றின் மூலம் பெறப்படும் பண்பு ரீதியான தகவல்கள் அளவு ரீதியாக மாற்றப்படும். எனவே இவ்வாய்வு அளவு, பண்பு ஆகிய இரண்டு முறைகளைக் கொண்ட கலப்பு முறை ஆய்வாகவே மேற்கொள்ளப்படும்.

1.9.4 ஆய்வு வடிவம்

இந்த ஆய்வின் நோக்கம் இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் இடைநிலை வகுப்புக்களில் தரம் பதினொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் செல்வாக்கு செலுத்துவதனை ஆராய்வதாகும். மாணவர்கள் தங்களுடைய கற்றல் – கற்பித்தல் நடவடிக்கையில் சிறந்து விளங்க வேண்டுமென்ற நோக்கிலேயே பாடசாலை செல்கின்றனர். உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் பங்கேற்கும் மற்றும் பங்கேற்காத மாணவர்களிடையே கற்றல் அடைவுகளின் வெவ்வேறு நிலைகளை அடையாளம் காண இந்த ஆய்வுக்கு அளவறி அணுகுமுறை பயன்படுத்;தப்படுகின்றது. வினாக்கொத்து, பேட்டிகாணல், கலந்துரையாடல் என்பன தரவு சேகரிப்பதற்கான கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்ததாக ஆய்வு குடித்தொகை பற்றிய தெளிவான விளக்கமோ, வரையறையோ இல்லாமல் ஆய்வினை வெற்றிகரமாக செயற்படுத்த முடியாது. ஆய்வினை மேற்கொள்வதற்குரிய பொருளாதார செலவு, காலம் என்பன நடைமுறை சாத்தியம் கொண்டதாக இருத்தல் வேண்டும். மேலும் இவ்வாய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட அரச பாடசாலைகளில் இறுதியாக தரம் 11 இல் கல்வி பயின்;ற மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளும் பகுப்பாய்வுக்காகப் பயன்படுத்;தப்படவுள்ளது. மேலும் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் மாணவர்களின் அடைவுமட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் விதத்தை ஆராய்வதால் இவ் ஆய்வு ஒரு கருதுகோள் சோதனை ஆராய்ச்சி வடிவமைப்பை ஏற்றுக்கொள்கிறது.

1.9.5 ஆய்வு வரையறை

இடைநிலை மாணவர்களுக்கான தரம் பதினொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் மாணவர்களின் அடைவுமட்டத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்பதை ஆராய்வதே இவ்வாய்வாகும். நாட்டிலுள்ள சகல வலயங்களிலும் தரம் பதினொன்றில் கல்வி பயிலும் மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியர்களையும் ஆய்விற்குட்படுத்தி முடிவுகளை பெற வேண்டும். எனினும் ஆய்வாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கால அளவு, பொருளாதாரம், ஆய்வுக்கான செலவு என்பவற்றைக் கருத்திற்கொண்டு மத்திய மாகாணத்தின் கம்பளை கல்வி வலயத்தில் காணப்படும் ஐந்து தமிழ்மொழி மூல இடைநிலை பாடசாலைகளைத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அப்பாடசாலைகளில் தரம் பதினொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர், தரம் பதினொன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் மாதிரிகளாக எடுக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்வு மூலம் பெறப்படும் முடிவுகள் கம்பளை கல்வி வலய இடைநிலை பாடசாலைகளுக்குப் பொதுமைப்படுத்தக் கூடியதாக இருக்கும். குடித்தொகை மாதிரிகளின் மூலம் பெறப்படும் தகவல்கள் யாவும் ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும

1.9.6 தரவு சேகரிப்பு

குடித்தொகையும் மாதிரியும்

இவ்வாய்வுக்கு மிகப் பொருத்தமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நுட்பமாக படையாக்கப்பட்ட எழுமாற்று மாதிரி தெரிவு நுட்பமாக பயன்படுத்தப்பட்டது. இந்த முறை பல்வேறு அடுக்குகளிலிருந்து பங்கேற்பாளர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்கிறது. மொத்த குடித்தொகை மாதிரியானது Krejcie.R and morgen D.W (1970). ஆகியோரின் மாதிரிப் பருமனைத் தெரிவு செய்வதற்காகன அட்டவணையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. புள்ளி விபரம் மற்றும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் அளவைக் கருத்தில் கொண்டும் பொருளாதார சிக்கனத்தைக் கருத்திற் கொண்டும் மாதிரிகளின் அளவு தீர்மானிக்கப்பட்டது.

அட்டவணை: 02 மாதிரித் தெரிவு

  Stratum                                       Students               Secondary Teachers                  Parents
Population Size                             130                                    20                                        20   Number of questionnires            130                                    20                                        20 (Calculation)  
Final number of  130                                    20                                        20 questionnires  

1.9.7 தரவு சேகரிப்புக் கருவிகள்

கம்பளை வலயத்திற்குட்பட்ட 5 இடைநிலை தமிழ்மொழி மூல பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகளில் கற்றல் அடைவு எவ்வாறு தாக்கத்தை செலுத்துகிறது என்ற ஆய்வினை மேற்கொள்ள பின்வரும் தரவு சேகரிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  1. வினாக்கொத்து
  2. கலந்துரையாடல்
  3. நேர்காணல்
  4. அவதானிப்பு
  5. ஆவணப்பகுப்பாய்வு
    இவற்றுடன் Likert Scale அறிக்கைகள் மற்றும் மொத்த சனத்தொகையின் தகவல்களுடன் கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

1.9.8 ஆய்வறம்

ஆய்வாளனால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் GREY (1990) ஆய்வறம் பற்றிய பின்வரும் நியமங்கள் பின்பற்றப்பட்டுள்ளன.

• பங்குதாரர்கள் நெருக்கடி நிலைக்கு உள்ளாகுவதை தடுத்தல்.
• பெறுபேற்றின் நன்மையை கருத்திலெடுத்து பங்குபற்றுபவர்கள் நெருக்கடி நிலைக்கு உள்ளாகுவதை தவிர்த்தல்.
• ஆய்வின் நோக்கம், எதற்காக தகவல்கள் சேகரிக்கப்படுகின்றது தொடர்பான தகவல்கள் வழங்கப்படல்.
• ஆய்வுடன் தொடர்புடையவர்களிடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக தகவல் வழங்கப்படல்.
• பெறப்படுகின்ற தகவல்களை ஆய்வுக்காக மாத்திரம் பயன்படுத்தல்.
• தகவலாளர் தொடர்பான இரகசிய தன்மை பேணப்படல்.

உசாத்துணை

Central Bank of Sri Lanka (2019) Economic and social statistics of Sri Lanka 2019.

Cotto.C.M. (2016) The Impact of Interscholastic Athletic Participation on Academic Success. St. John Fisher College.

Gomez – Fernandez N..& Albert J-F. (2020), Physical activity in and out-of-school and academic performance In Spain. Health Education Journal

79(7),20.https://doi.org/10.1177/0017896920929743

Manel,D.P.K.; Sureeporn, P. & Perera, S. (2017). Social and economic differentials among households of urban migrants: evidence from kalutara District, Sri Lanka. Sri Lanka Journal of Social Sciences Volume 40. No 02.Page 127-140.

Read more:

எமது WhatsApp குழுமத்தில் இணைய கிழே உள்ள link இனை அழுத்தவும்.  

ஆரம்பப்பிரிவு  ( தரம் 01 – 05 ) குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.

https://chat.whatsapp.com/GUJDMcOOP1REj266FNVA6X

இடைநிலைப்பிரிவு ( தரம் 06 – A/L)  குழுமத்தில் இணைய கிழே உள்ள link  இனை அழுத்தவும்.

https://chat.whatsapp.com/CRxK1Zqu0XJ52hJYNGC6a

Sharing Is Caring:

Leave a Comment